Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் ஆடித் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்தேரோட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பூர திருவிழா; திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பூர திருவிழா; திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2025
06:07

மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர்  கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர உற்சவம் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.   அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்தும், அர்ச்சனைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.

இதே போல திருஞானசம்பந்தரால் முதல் தேவார பதிகம் பாடப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டை நாதர் கோவிலில் இருந்து திருநிலை நாயகி அம்பாள், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளை வலம் வந்த போது பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்தும், அர்ச்சனைகள் செய்து அம்பாளை வழிபட்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி கோவில்  செந்தில் ஆகியோரின் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar