Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் புத்து மாரியம்மன் ...  வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் விழா கொடியேற்றம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரகதீஸ்வரருக்கு புனித கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்ட பிரதமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2025
02:07

அரியலுார்; கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி, கங்கை நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார்.


Default Image
Next News

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆடி திருவாதிரை விழா 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று நடந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, வாரணாசியில் இருந்து எடுத்து வரப்பட்ட கங்கை நீரை கொண்டு, பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தார். ஓதுவார்கள் திருவாசகம் பாடி, தீபாராதனை காட்டி, தமிழில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அவர் துர்க்கை அம்மன் சன்னிதியில் தியானம் செய்தார். பிரதமர் மோடிக்கு, கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ரோடு ஷோ ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டிருந்த சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வரை, பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றார். வழியெங்கும் இரு புறமும் திரண்டிருந்த மக்கள், மலர் துாவி அவரை வரவேற்றனர். மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.


மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பாரம்பரிய முறையில் வேட்டி, சட்டை மற்றும் பட்டு துண்டு அணிந்திருந்தார். கோவிலின் கலைநயம் மிக்க சிற்பங்களை பார்த்து, பிரதமர் மோடி வியந்தார். அதன் சிறப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். திருச்சி முன்னதாக, துாத்துக்குடியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். காலை, அரியலுார் செல்வதற்காக, காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்ட அவர், கன்டோன்மென்ட், ஒத்தக்கடை, டி.வி.எஸ்., டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக விமான நிலையத்துக்கு சென்றபோது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு கையசைத்தனர். காருக்குள் இருந்த பிரதமரும் புன்னகைத்தவாறு மக்களை பார்த்து கையசைத்து சென்றார். சில இடங்களில் பா.ஜ., கட்சியினர் மலர்களை துாவி, பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar