Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ... ஆடிப்பூரம்; விழா மட்டுமல்ல நினைத்ததை சாதிக்க பெண்கள் அன்னையைக் கொண்டாடும் நாள்! ஆடிப்பூரம்; விழா மட்டுமல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
 மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2025
07:07

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 54வது ஆண்டு ஆடிப்பூர விழா, நேற்று கோலாகலமாக துவங்கி, நாளை வரை நடக்கிறது.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறும். இந்தாண்டு, 54வது ஆண்டு ஆடிப்பூர விழா, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச விளக்கு வேள்வி பூஜையுடன் நேற்று துவங்கியது. இதைத்தொடர்ந்து, ஆடிப்பூர விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். அதன் பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், காலை 11:00 மணிக்கு துவக்கி வைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், இந்திய விமான படை ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த லிங் கமாண்டர், ‘ட்ரம்ஸ்’ கலைஞர் சிவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று, உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயம்புத்துார், திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மணி, கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பாலாபிஷேகம், இன்று மாலை வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar