பதிவு செய்த நாள்
12
செப்
2014
04:09
நேர்மை மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!
நன்மை அதிகரிக்கும் காலமாக இந்த மாதம் அமைந்துள்ளது. முக்கிய கிரகங்களில் சூரியன், புதன் சாதகமாக இருக்கின்றனர். குருவின் பலனும் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் செப். 26ல் இடமாறி நன்மை தருகிறார். எடுத்துக் கொண்ட முயற்சி அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பெண்களால் நன்மையும், வளர்ச்சியும் ஏற்படும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானம் இருப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்கால நலன் கருதி சேமித்து வைப்பீர்கள். மாற்றுத் தொழில் முயற்சியிலும் வெற்றி உண்டாகும். கடந்த காலத்தில் இருந்த எதிரி தொல்லை இனி அடியோடு நீங்கும். குறைந்த முதலீட்டில் கூட நிறைந்த லாபத்தை காணலாம். அதிர்ஷ்ட வசமாக எதிர்பாராத வகையிலும் வருமானம் கிடைக்கும்.பணியாளர்கள் வேலையில் திருப்தி காணலாம். பின் தங்கிய நிலை மாறி வளர்ச்சி ஏற்படும். அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். கோரிக்கைகள் தற்போது நிறைவேறும்.
கலைஞர்கள் செப். 26க்கு பிறகு சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காணலாம்.
அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் கவுரவத்தோடு காணப்படுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல வளத்தைக் காணலாம். நல்ல மதிப்பெண் கிடைப்பதோடு, போட்டிகளில் வெற்றி வாகை சூடுவர்.
விவசாயிகளுக்குப் பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் தாமதம் ஏற்படும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.
பெண்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பர். உறவினர் மத்தியில் நற்பெயர் பெற்று மகிழ்வர்.
நல்ல நாள்: செப். 21, 22, 23, 24, 25, 29, 30, அக். 3, 4, 9, 10, 11, 12, 13
கவன நாள்: செப்.17, 18 அக். 14, 15 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,5,9 நிறம்: செந்துõரம்,மஞ்சள், பச்சை
வழிபாடு: ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி செய்யலாம். காளி கோயிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.