பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
உத்திரமேரூர் : அரும்புலியூர் வைகுந்தவாசப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவசம், நேற்று கோலாகலமாக நடந்தது. அரும்புலியூரில் எழுந்தருளியுள்ள வைகுந்த வாசப்பெருமாள் கோவிலுக்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம், கருடசேவை திருவிழா நடப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டிற்கான கருடசேவை உற்சவம், நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, வைகுந்த பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து, அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு, மதியம் 1:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுந்தவாசப் பெருமாளுக்கு அலங்கார சேவை அர்ச்சனையும், அதை தொடர்ந்து, பத்ம மண்டபத்தில் உற்சவருக்கு திருமஞ்சனமும் நடந்தன.அப்போது, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனகாப்பு, மஞ்சகாப்பு, இளநீர் போன்ற அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் மலரால் அலங்கரிக்கப்பட்டு, வைகுந்தவாசப் பெருமாளையும், ஆனந்தவல்லி தாயாரையும், பக்தர்கள் வழிபட்டனர்.இந்த விழாவில், அரும்புலியூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய கோயில்கள் :