சபரிமலை -பம்பை கோயில்கள் இனி ஒரே நேரத்தில் திறக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2014 12:12
சபரிமலை:சபரிமலை- மற்றும் பம்பையில் உள்ள அனைத்து கோயில்களும் இனி வரும் நாட்களில் ஒரே நேரத்தில் திறந்து நடைசாத்தும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் கூட்டம் இருப்பதை பொறுத்து நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கூட்டம் அதிகமாக இருந்தால் காலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கே திறந்து விடும். அதுபோல இரவில் நடை சாத்துவது 11 மணிக்கு பதிலாக, கூட்டம் அதிகமானால் 11.45 மணிக்கு சாத்தப்படும்.
ஆனால் பம்பையில் இதுபோலின்றி, காலை, மாலை 5 மணிக்குதான் கணபதி கோயில் திறக்கும். இதுபோலவே ராமர், அனுமன் கோயில்களும் திறக்கப்பட்டு வந்தன. சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்து முடிந்ததும் கணபதி கோயிலில் தேங்காய் உடைத்து கோயிலை வலம் வந்த பின்னரே தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். ஆனால் கோயில் நடை அதிக நேரம் அடைக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் வழிபடமுடியாத நிலை இருந்தது. இதை தொடர்ந்து கோயில் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சபரிமலை நடை திறக்கும் நேரத்தில் பம்பையில் உள்ள அனைத்து கோயில்களின் நடையும் திறக்கப்படும் என்றும், சபரிமலையில் நடை சாத்தப்படும்போதுதான் அங்கும் நடை சாத்தப்படும். இதுபற்றி அவ்வப்போது பம்பைக்கு போனில் தெரிவிக்கப்படும் என, சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.