சபரிமலை:அப்பம், அரவணை மற்றும் நெய் அபிஷேக டிக்கெட்கள் தனலட்சுமி வங்கி கிளைகளில் கிடைக்கிறது.சபரிமலை பயணத்தில் பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய் அபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் கொண்டு வரும் நெய் அபிஷேகம் செய்ய பத்து ரூபாய் கட்டணமாகும். இதற்கான டிக்கெட்கள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு டிக்கெட் கவுன்டர்களில் வழங்கப்பட்டு வருவதுடன் அனைத்து தனலட்சுமி வங்கி கிளைகளிலும் கிடைக்கிறது. இதுபோல அவரணை, அப்பம் டிக்கெட்டுகளும் இந்த வங்கி கிளைகளில் கிடைக்கிறது. ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஒரு பாக்கெட் அப்பம் 25 ரூபாய். பக்தர்கள் வங்கி கிளைகளில் இருந்து டிக்கெட் வாங்கி வந்து விட்டால் சன்னிதானத்தில் இதற்காக சிறப்பு கவுன்டர் செயல்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் பிரசாதம் பெற்று செல்ல முடியும். இந்த ஆண்டு அப்பம், அரவணை மற்றும் வழிபாடுகள் ஆன்-லைனனில் முன்பதிவு செய்யப்படுகிறது. எனினும் இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.