Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ... திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு: கூத்தாண்டவர் கோவிலில் கோலாகலம்! திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,000 ஆண்டு பழமையான கோயிலில் முதல் முறையாக தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
3,000 ஆண்டு பழமையான கோயிலில் முதல் முறையாக தெப்பத்திருவிழா!

பதிவு செய்த நாள்

06 மே
2015
11:05

கீழக்கரை: மூவாயிரம் ஆண்டு பழமையான உத்திரகோசமங்கை கோயிலில் முதல்முறையாக தெப்பத்திருவிழா நடந்தது உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக புராண வரலாறு கொண்ட இக்கோயிலில், முதன்முறையாக நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் 50 அடி உயரம் கொண்ட தெப்பம் அமைக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் ராஜமரியாதையுடன் மூலவரை அழைக்கும் அனுக்ஞை பூஜை நடந்தது. பின்னர் பிரியாவிடையுடன் மங்களநாயகி சமேதராக மங்களநாத சுவாமி சயனக்கோலத்தில் அக்னி தீர்த்தக்குளம் தெப்பத்தில் எழுந்தருளினார். வேத பாராயணம், கைலாச வாத்தியங்கள், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருபொன்னுஞ்சல் ஆகியவை பாடப்பட்டன. தெப்பத்தில் 11 முறை வலம் வந்த சுவாமியை திரண்டிருந்த பக்தர்கள்,சிவ நாம கோஷங்கள் முழங்க, தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ்ராஜா, பேஷ்கார் ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் நாகராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவஸ்ரீ ராஜலிங்க குருக்கள் செய்திருந்தார். விழா துளிகள்: *சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்களால் சிரமத்திற்குள்ளாகினர். * தெப்பம் மின்னொளியில் ஜொலித்தாலும், அக்னி தெப்பக்குளத்தின் நான்கு புறமும் இருளாக இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar