கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) செல்வாக்கு உயரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2015 03:08
சூரியனை நட்பு கிரகமாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் குரு,செவ்வாய் முழு நன்மை தருவார்கள். புதன் ஆக. 21ல் சாதக இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். அவராலும் செப்.15 வரை நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால், எந்த ஒரு செயலையும் அதிக சிரத்தை எடுத்து முடிக்க வேண்டியிருக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். செவ்வாயால் லாபத்தில் குறை இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். செப். 2,3,4ல் பண வரவு இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பதவி உயர்வு உண்டு. உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். போலீஸ், ராணுவப்பணியினர் முன்னேற்றம் காண்பர். பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் ஆக. 24க்கு பிறகு மறையும்.ஆனால் அதன் பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பலன் பெறலாம். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை பயன்உள்ளதாக இருக்கும். சிரத்தை எடுத்து படித்தால் மதிப்பெண் மிகவும் உயரும்.
விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவர். நெல், கோதுமை மற்றும் பழ வகைகள், கிழங்கு வகைகள் மூலம் அதிக லாபம் உண்டு. புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். வழக்கு, விவகாரம்சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆடை வாங்கலாம்.தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும்.