மயிலாடுதுறை: மாயூரநாதர் கோயிலில் கடந்த 2005 ம் ஆண்டு ஆவணிமாதம் உத்திராட நட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி ஆண்டுதோறும் ஆவணிமாதத்தில் வரும் உத்திராட நட்சத்திரத்தில் வருடாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஆகஸ்டு 27ம் தேதி வியாழக்கிழமை உத்திராட நட்சத்திரம் கூடியநாளில் வருடாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மாயூரநாதருக்கு ருத்ராபிஷேகமும் அபயாம்பிகை விநாயகர் குமரக்கட்டளை சுப்மணியர் ஆகிய மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நிகழ்ந்தன. சிவபுரம் வேதசிவாகமபாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார் தலைமையில் பூஜைகள் நிகழ்ந்தன. திருவாவடுதுறையாதீனம் கட்டளைவிசாரனை சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசி த்தனர்.