பதிவு செய்த நாள்
06
பிப்
2016
10:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிபெருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் பூச்சொரிதலுடன் துவங்கியது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,4ல் துவங்கியது. அன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு கோயிலில் இருந்து அம்மனின் அலங்கரிக்கப்பட்ட பூத்தேர் புறப்பட்டது. மேற்கு ரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக கோயிலை அடைந்தது. ஊர்வலத்தின்போது மாட வீதிகளின் ஓரங்களில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் பல்வேறு வகையான மலர்களை அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். பிப்.,9ல் கொடியேற்றம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து நாகல்நகர் புறப்பாட்டு விழா, பூக்குழி, தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், கொடியிறக்கம், ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவ நிகழ்வுகள் நடக்க உள்ளன.