பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
02:04
குரு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் இருப்பதால் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் ஏப்.26 முதல் உங்கள் ராசிக்கு வருவது நன்மைக்கு வழிவகுக்கும். செவ்வாய் சாதகமற்று இருந்தாலும் கெடுபலன் உண்டாகாது. குருவால் குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.
சுக்கிரனால் ஏப். 25 க்கு பிறகு நன்மை கிடைக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்ப வாழ்வு சிறக்கும். தம்பதி இடையே அன்பு மேலோங்கும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் நலம் பாதிக்கப்படலாம். சிலர் அடிக்கடி சோர்வுக்கு ஆளாவர். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் தடைகளை கடந்து முன்னேற வேண்டியது இருக்கும். ஆனால் லாபத்திற்கு குறை இருக்காது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். ஏப்ரல் 25க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். ஆனால் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். ஏப். 25 க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
கலைஞர்கள் குதுõகலமாக காணப்படுவர். ஏப். 25க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்பட்டாலும் எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை.
மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். குரு சாதகமான நிலையில் இருப்பதால் படிப்பில் தொய்வு ஏற்படாது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்க தடையேதும் இல்லை. கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலன் காண்பர். குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். ஏப். 22,23 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர்.
நல்ல நாள்: ஏப். 14,19,20,21,22,23,29,30 ,மே 1,2,5,6,7,10,11
கவன நாள்: ஏப். 24,25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்-5,7 நிறம்: மஞ்சள், சிவப்பு
வழிபாடு: நவக்கிரகங்களை வழிபடுங்கள். குல தெய்வத்தை வணங்கத் தவறாதீர்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தினமும் சூரியனை வழிபடுங்கள். பிரதோஷத்தன்று சிவனை வணங்குங்கள்.