பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
02:04
ராசிக்கு 11-ல் புதனும், சூரியனும் இணைந்திருப்பதும், 3ல் ராகுவும், 6ல் செவ்வாயும், சனியும், இருப்பதும் நன்மையான பலனை அளிக்கும். சுக்கிரன் ஏப். 25 முதல் நன்மையை வாரி வழங்குவார். சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. ஏப். 27,28 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் நன்மை உண்டாகும். ஏப். 25 க்கு பிறகு உறவினர்களால் நன்மை ஏற்படும். உடல்நலம் சீர் பெறும்.
தொழில், வியாபாரம் வருமானத்திற்கு குறைவிருக்காது. பகைவகளின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். ஏப். 24,25,26 ல் எதிர்பாராமல் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதன் சாதகமாக இருப்பதால் பணிச்சுமையைச் சந்தித்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது.
கலைஞர்கள் ஏப். 25 வரை முயற்சியில் தடையை சந்திப்பர். ஆனாலும் அதைக் கண்டு அஞ்சாமல் உழைத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்த்தபடி புகழ் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி தேடி வரும். மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு கால்நடை மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நெல், சோளம், பழவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் கூடுதல் வருமானம் கிடைக்கும். செவ்வாயால் புதிதாக சொத்து சேர்க்கை உண்டாக யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கலாம். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். ஏப். 17,18 ல் பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஏப். 14,17,18,24,25,26,27,28, மே 3,4,5,6,7,10,11
கவன நாள்: ஏப். 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்கள்- 1,3,9 நிறம்: சிவப்பு ,செந்துõரம், பச்சை
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் வழிபாடு நடத்துங்கள். தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு தானம் அளியுங்கள்.