செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2016 10:05
வில்லியனுார்: வில்லியனுார் ஜி.என் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா வரும் 31ம் தேதி நடைபெறுகிறது. ஜி.என் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் நேற்று 3ம் நாள் விழாவில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 29ம் தேதி பிடாரியம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 30ம் தேதி ஐயனாரப்பனுக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல் நிகழ்ச்சியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 31ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு மேல் செடல் உற்சவமும், பகல் 12:00 மணிக்கு மேல் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7:00 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் கிராம வாசிகள் செய்துவருகின்றனர்.