நகரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி அருகில் உள்ள பிரசன்னா ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், அனுமன் ஜெயந்தியை ஒட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், புத்துார் டவுனில் உள்ள பக்த ஆஞ்நேயர் கோவிலிலும் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.