மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பதவி உயர்வு பெறுவீங்க! சுபநிகழ்ச்சி நடத்துவீங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 09:08
மென்மையான மனம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட இந்த மாதம் நற்பலன் அதிகரிக்கும். சூரியன் சாதகமாக இருப்பதால் நன்மையை வாரி வழங்குவார். அதோடு செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு ஆகியோராலும் நற்பலன் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் பெருகும். வீண் விரயம் இனி இருக்காது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். புதிதாக வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். ஆக.26க்கு பிறகு நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். ஆக.23,24ல் விருந்தினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப்.3,4ல் உறவினர் வகையில் வீண் பிணக்கு வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக.27,28ல் பெண்களால் பண ஆதாயம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் சூரியனால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். இந்த மாதம் கையில் இருப்பதை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. புதிய தொழில் முயற்சி அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை ஏற்படும். புதனால் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும்.அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செப். 8,9ல் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். ஆக. 25,26,29,30,31ல் சந்திரனால் முயற்சியில் தடை ஏற்படலாம்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காவல்துறை ஊழியர்களுக்கு இருந்து வந்த பிற்போக்கான நிலை மறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால், அதற்குரிய நற்பலன் கிடைக்கும். ஆக. 21,22ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் சுதந்திர மனப்பான்மையுடன் பணிபுரிவீர்கள்.
கலைஞர்கள் நல்ல வளர்ச்சியும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். மாத இறுதியில் சிலருக்கு அரசு விருது கிடைக்கலாம்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர். தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்கறையுடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை நன்மைக்கு வழிவகுக்கும். பெற்றோர் வழிகாட்டுதலை ஏற்பது நன்மை தரும்.
விவசாயிகள் கூடுதல் மகசூலை பெறுவர். குறிப்பாக நெல், கோதுமை, பயறு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடை மூலம் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். சொந்த தொழில் நடத்தும் பெண்களுக்கு தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பெண் காவலர்களுக்கு விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். ஆக. 26 க்கு பிறகு சகோதரிகளால் நன்மை கிடைக்கும். செப்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப். 10,11,12 சிறப்பான நாட்களாக அமையும். குடும்பத்துடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக. 21,22, 23,24,27,28 செப்.1,2,8,9,10,11,12 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மகரத்தில் சந்திரன் ஆக.17,18 செப்.13,14 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: செந்துõரம், வெள்ளை
பரிகாரம்: புதனுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாளை வழிபட்டால் செல்வ வளம் மேலும் பெருகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »