கேது, சனி, சுக்கிரனால் தொடர்ந்து நன்மை கிடைக்கும். செயலில் வெற்றியும், பொருளாதார வளமும் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். மனம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டுத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் செப்.19 வரை பெண்களால் பொன், பொருள் சேரும். அடிக்கடி விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். சமூகத்தில் மரியாதை உயரும். செப்.30, அக்.1,2ல் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். செப்.26,27ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்.4க்கு பிறகு பிரிந்த தம்பதி ஒன்று கூடுவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். குடும்பத்துடன் புனித தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. செப்.21,22ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகத்தில் சீரான ஆதாயம் கிடைக்கும். சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட வீண் விரயம் இனி இருக்காது. புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். தொழில் ரீதியாக நீண்ட துõரப்பயணம் செல்ல நேரிடும். செப்.19க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். செப்.28,29, அக்.3,4 ஆகிய தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். செப்.29 வரை புதனால் போட்டியாளர்களால் தொல்லை குறுக்கிடலாம். அக்.12,13ல் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிச்சுமை, வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், செப்.29க்கு பிறகு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். அக்.4க்கு பிறகு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவுடன் நடப்பர். எதிர்பார்த்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். செப்.23,24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் நற்பெயரும், அதிக வருமானமும் காண்பர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகிழ்வர். செப்.19க்கு பிறகு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கபெறுவர். தொண்டர்களின் நலனில் அக்கறை கொள்வர்.
மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைப்பது அரிது.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். விளைச்சல் சுமாராகவே இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். அண்டை நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அக்.5,6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப். 17,18, அக். 14,15,16 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து விழா என சென்று வருவார்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப்.17,18,23, 24,25,26,27,30, அக்.1,2,5,6,7,12,13,14, 15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மேஷத்தில் சந்திரன் செப். 19,20 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.