பதிவு செய்த நாள்
28
செப்
2016
11:09
திருவள்ளூர் : விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், இன்று, மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பிரமாண்டமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று, மூலவருக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு துவங்கியது. பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பின், வடை மாலை சார்த்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.