மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆடம்பர வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 10:10
மனசாட்சியுடன் நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் சாதகமான பலன் அளிக்க காத்திருக்கிறார். சுக்கிரன் நவ.8 வரை நன்மையை வாரி வழங்குவார். சூரியன், குரு, சனி மாதம் முழுவதும் நற்பலனைத் தருவார்கள். நினைத்தது விரைவில் நிறைவேறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். அக்.17,18ல் விரும்பத்தகாத வகையில் சிலரது பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் குருவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி பெருகும். கடந்த காலத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். அக்.18க்கு பிறகு சகோதரிகளின் உதவி கிடைக்கும். நவ.1,2,3ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.13,14ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்பு உண்டு. மாத இறுதியில் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்பு உண்டாகும். உடல்நிலை அதிருப்தி அளித்தாலும் அக்.25க்கு பிறகு பிரச்னை மறையும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுகப்போட்டி அக். 18 க்கு பிறகு மறையும். அரசாங்க வகையில் விழிப்புடன் இருப்பது நல்லது. வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சந்திரனால் நவ.4,5,9,10ல் முயற்சியில் தடை உருவாகலாம். அக்.21,22ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். போட்டியாளர் இடையூறு அடியோடு மறையும். நவ.3க்கு பிறகு தொழிலில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அக். 30,31 சிறப்பான நாட்களாக அமையும். பணி தொடர்பாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
கலைஞர்கள் சிறப்பான நிலையைக் காணலாம். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ப மரியாதை கிடைக்கும். நவ.8க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். ஆனால் போதிய வருமானம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் ஓரளவு பலனை எதிர்நோக்கலாம். புகழ், கவுரவத்திற்கு பங்கம் உண்டாகாது. விடாமுயற்சியோடு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அக்.19,20, நவ.15ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் புதனால் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் குறைவிருக்காது. கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வீட்டுச் செலவுக்குத் தேவையான வருமானம் இருக்கும். திருமண முயற்சியில் இருந்த தடை நீங்கும். அக்.23,24ல் சிறப்பான பலனைக் காணலாம். நவ.11,12ல் புத்தாடை -அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப்பெறலாம். கேதுவால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக்.21,22,23,24,30,31 நவ.1,2, 3,6,7,8,11,12 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான சிம்ம ராசியில் சந்திரன் அக்.25,26ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 1,2,3 நிறம்: பச்சை, செந்துõரம்
பரிகாரம்: சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். ராகு காலத்தில் துர்க்கை, பைரவருக்கு பூஜை செய்யலாம். துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »