பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேருவீதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ‘பொள்ளாச்சி சீரடி சாய்பாபா சாரிடபிள் டிரஸ்ட்’ சார்பில், உலக அமைதிக்கான கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. மதியம் ஆரத்தி நடந்தது. அதில், திருமணமாகாதவர்களுக்கு, திருமணமாக வேண்டும்; குழந்தை பாக்கியம், உடல்நலம் சரியில்லாத நினைவு திரும்பாதவர்களுக்கு நினைவு திரும்பும் வகையிலும் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.