மார்கழி மூலம் நட்சத்திரத்தில் பிறந்த அனுமன் பற்றி விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள். மகாவீரனான அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகவும், இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைப்பவராகவும் திகழ்ந்தார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்யவும் அவர் தயாராக இருந்தார். பிரம்மலோக, சிவலோகப் பதவியைக் கூட அவர் பெரிதாக கருதவில்லை. இதுபோல முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.