சபரிமலை: சபரிமலை வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட 15 கோடி ரூபாய் அதிகம் வசூலாகியுள்ளது. சபரிமலையில் மண்டல காலம் தொடங்கி 29 நாட்கள் கடந்துள்ளது. ஆரம்பத்தில் கூட்டம் மந்தமாக இருந்தாலும் அதன் பின்னர் கூட்டம் படிப்படியாக அதிகரித்து கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது. 25 நாட்களின் கணக்கீட்டின் படி மொத்த வருமானம் 85.96 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் வருமானம் 72.98 கோடியாக இருந்தது. 25 நாட்களில் 13 கோடி ரூபாய் அதிகரித்த நிலையில் 27 நாட்களில் இந்த வித்தியாசம் 15 கோடி ரூபாயை கடந்துள்ளது. அபிஷேகத்தில் 84.79 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அப்பம் விற்பனையில் 7.31 கோடி, அரவணை விற்பனையில் 37.71 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.