வழிபாட்டில் முன்னோருக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டியிருந்தால் முன்னுரிமையை முன்னோருக்கே தர வேண்டும். ஒருமுறை ஹரிதாசர் என்ற பக்தரைக் காண கண்ணன் நேரில் வந்தார். அப்போது தாசர், தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்., வாசலில் நின்று தாசரை கண்ணன் அழைக்க, ‘‘நான் இப்போது என் பெற்றோருக்கு பணிவிடை செய்து வருகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். அதோ! வாசலில் தெரிகிறதே செங்கல்...அதன் மீது ஏறி நில்லுங்கள். நான் வரும் வரை அதில் தான் நிற்க வேண்டும்,’’ என்றார். பக்தரின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்ணனும் காத்திருந்தார். அதனால் கண்ணனுக்கு ‘விட்டல்’ என்னும் பெயர் ஏற்பட்டது. விட்டல் என்றால் ‘செங்கல்’ என்று பொருள். அமாவாசைஅன்று மறைந்த பெற்றோரை முதலில் வழிபட்ட பின்னரே, அன்றாடம் செய்யும் வீட்டு பூஜையை நடத்த வேண்டும்.