*மற்றவர்களின் உடல்பலம், பணபலத்தைக் கண்டு அஞ்சாமல், எது வந்தாலும் ஏற்கும் பக்குவம் வேண்டும். நான் ஜெயிக்க பிறந்திருக்கிறேன் என்று விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். *மனிதப்பிறவி கிடைப்பது அரிதானது. மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் கடவுள் மீதும், உயிர்கள் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும். *வெற்றிப்பாதையில் நம்மை செலுத்த, தெய்வீக சக்தியை நோக்கி மனதை திருப்பினால் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்கும். *புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்கக் கூடாது. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியை கைவிடுவதும் கூடாது. *உலகம் வேண்டுமானால் ஒருவனை தோல்வியாளனாக கருதலாம். ஆனால், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருப்பவனுக்கு வெற்றி கிடைக்கும். *நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். கடவுளின் ஒப்பற்ற படைப்பாக இருக்கும் நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். *தினமும் இரவு தூங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணிகளைப் பட்டியலிடுங்கள். இது உங்களை நீங்களே திருத்திக் கொள்ளவும், மறுநாள் பணி குறித்து திட்டமிடவும் வசதியாக இருக்கும். *வேகத்துடன், விவேகத்தையும் மனதில் வளர்த்துக் கொண்டால் நெருக்கடி நேரத்தில் தக்க பாதுகாப்பாக அமையும். *மகான்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் சோதனை குறுக்கிட்டாலும் மனம் தளராமல் அவர்கள் போராடி வென்றதை உணர முடியும். *எந்த வேலையையும், நாளை பார்க்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். காலம் தாழ்த்தினால் நம்மை நாமே ஏமாற்றுவதாக ஆகி விடும். *பிறர் கூறும் பழிச் சொற்களை பொருட்படுத்த வேண்டாம். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். அமைதியும், உறுதியும் உள்ளத்தில் இருந்தால் நீங்கள் வெற்றி வீரராகத் திகழலாம். *எண்ணம் முளைவிடும் விதை போன்றது. நன்மை, தீமையை விளைவிக்கும் இருவித எண்ணங்கள் உலகில் இருக்கின்றன. மனதிற்குள் எதை அனுமதித்தாலும் அதற்கான பலனை அளிக்கத் தொடங்கும். *இறை சிந்தனையோடு செய்யும் பணி தியானத்திற்கு ஈடானது. இதனால், மனம் ஒருமுகப்பட்டு பணியை சிறப்பாகவும், விரைவாகவும் செய்ய முடியும். *கூச்சல், குழப்பம் மிக்க இடங்களில் இருந்து விலகி இருங்கள். அமைதி வேண்டுமானால் தனிமையில் அமர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். (பரமஹம்ச யோகானந்தர்)