திருத்தணி: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகப்பெருமான் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழா மிகவும் விசேஷம்.இந்த நாளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகனுக்கு பட்டுவஸ்திரம் வழங்குவது வழக்கம்.அந்த வழக்கப்படி திருமலை கோவில் நிர்வாக அதிகாரி அனில்குமார்சிங்கால் பட்டு வஸ்திரத்தை வழங்கினார் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.