பரமக்குடி; பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் உள்ள அலங்காரமாதா சர்ச்சில் அன்னையின் தேர்ப்பவனி நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன் தொடங்கிய விழாவில், தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை திருப்பலி நிறைவடைந்து, இரவு 8:00 மணிக்கு மேல் அலங்காரமாதா மின்னொளி வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக தேர்ப்பவனி வந்தார். பரமக்குடி பங்குத்தந்தை, பங்குமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.