பதிவு செய்த நாள்
22
ஆக
2017
12:08
பழநி: பழநி வரும் பக்தர்கள் நீராடும் சண்முகநதியில், பல ஆண்டுகளுக்குபிறகு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பழநி முருகன்கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாவிற்கு வரும் பக்தர்கள் உடுமலை ரோட்டிலுள்ள சண்முகநதி ஆற்றில் நீராடுவர். பின்பு அலகு குத்தியும், காவடிஎடுத்தும் வருகின்றனர். சண்முகநதியின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் கரையோரத்தை, ஆக்கிரமித்து பலர் தற்காலிக கூடாரங்கள், குடிசை வீடுகள் அமைத்திருந்தனர். அதனை அகற்றும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து அதிகாரிகள் சண்முகநதி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால், பறிமுதல் செய்யப்படும் என பொதுப் பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
சுத்தமான சண்முகநதி: சண்முகநதி நதி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த கட்டட இடிபாடுகள், செடி,கொடிகள், மரங்கள் முற்றிலும் அகற்றும் பணி நடக்கிறது. கண்காணிப்பை தீவிரப்படுத்தி நிரந்தரமாக சண்முகநதியை சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுபணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.