பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
நாமக்கல்: நாமக்கல், கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாமக்கல், திருச்சி சாலையில் ஆர்.சி., சர்ச் உள்ளது. இந்தாண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு திருப்பலி நடந்தது. 9:30 மணிக்கு கொடி மரத்தின் பீடம் மந்திரிப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. மெட்டாலா லயோலோ கல்லூரி முதல்வர் சேவியர் வேதம், கொடியோற்றினார். இன்று மாலை, 6:30 மணிக்கு கொல்லிமலை பிரான்சிலியன் பள்ளி முதல்வர் டோனி தலைமையில், நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 21 மாலை, 6:30 மணிக்கு மேட்டுப்பட்டி அன்பு இல்லம் டென்னிஸ், சந்தானம் மற்றும் அகஸ்டின் ஆகியோர் பங்கேற்கும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22 மாலை, 6:30 மணிக்கு ஈரோடு புனித மரியன்னை ஆலயம் ஜான் இயேசு சிஜூ சார்பில், நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 23ல், சேந்தமங்கலம் கப்புச்சின் சபை வில்சன் மற்றும் சத்தியசீலன் சார்பிலும், 24 மாலை, 6:30 மணிக்கு சேலம் சமூக சேவை மையம் ராஜமாணிக்கம், 25ல், நாமக்கல் சமூக சேவை மையம் இயக்குனர் செல்வம் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 26 அன்று திருவிழாத்திருப்பலி, புதுநன்மை, உறுதிபூசுதல் வழங்கும் விழா நடக்கிறது. அதை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் சிங்காராயன் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு நாமக்கல் நகரில், கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது. இரவு, 9:30 மணிக்கு சேலம் புனித தெரசாள் ஐ.டி.ஐ., தாளாளர் ஆசீர்வாதம் தலைமையில், திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரான்சிஸ், ஆரோக்கிய டேவிட், புஷ்பநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.