புதுச்சேரி: முத்தியால்பேட்டை வீர ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் 20ம் ஆண்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் துவக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி, ஆஞ்ஜநேயர் மூல வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயண குழுவினரால் சகஸ்ரநாம பாராயண பாடல் பாடப்பட்டது. ஏற்பாடுகளை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயண குழுவினர் மற்றும் ஆஞ்ஜநேயர் கோதண்டராமர் கைங்கர்ய சபா குழுவினர் செய்திருந்தனர்.