பதிவு செய்த நாள்
03
செப்
2018
11:09
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு விழா துவங்கியது. 7:00 மணிக்கு, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணியளவில், கிருஷ்ணர் வேடமணிந்த, ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, மதியம், கிருஷ்ணர் கோவில் அடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், மேல்சாந்தி பவன் நம்பூதிரியின் தலைமையில் நடந்தன. தவிர, பாலக்காடு அடுத்துள்ள, குன்னத்துார்மேடு ஸ்ரீகிருஷ்ணர், சின்மயா தபோவன குருவாயூரப்பன் கோவில்களில் விழா கொண்டாடப்பட்டது. குன்னத்துார்மேடு ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில், அலங்கரிக்கப்பட்ட யானைகளில், கிருஷ்ணரின் தங்க சிலை, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.