பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
வைணவத்தில் கருடபுராணமும், வைசத்தில் லிங்க புராணமும் பித்ரு தர்ப்பண விதிகளை பதினெட்டாக வகைப்படுத்தி, அதற்கான பலன்களை ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளன.
அவை என்னென்ன?
பிரம்மபேதம் - பதவி உயர்வு, இந்திர பதம் - அரசாங்க அனுகூலம் பெற, தட்சிணாக்னி பதம் - காசிக்குப் போன பலன்பெற, கார்கபத்ய பதம்- தீவினைகள், சூன்யங்கள் விலக, ஆவஹவநீய பதம் - கடன் தொல்லைகள் தீர்ந்திட, ததீசி பதம் - திருஷ்டிகள் விலகி முன்னேற, ஸப்யபதம் - நல்ல பரம்பரை உருவாக, ஆவஸத்ய பதம் - வழக்கு, சிறைவாசம், அவப்பெயர் நீங்கிட, சூர்யபதம்- ஆரோக்ய விருத்திக்கு, சந்திரபதம் - குழந்தைப்பேறு உண்டாக, கார்த்திகேயபதம் - செவ்வாய் தோஷ நிவர்த்தி, கார்த்திகபதம்- இழந்த சொத்துக்களை திரும்ப பெற, அகஸ்த்யபதம்- மதிப்புடைய மனிதராக, க்ரவுஞ்ச பதம் - ருணம் எனும் கடன்தீர, கணேசபதம் - முயற்சிகள் வெற்றியடைய, கண்வபதம்- துர்மரணங்கள் நிகழா திருக்க, காச்யப பதம்- பித்ருசாபம் நீங்கிட, முழுமையான ஆசி பெற, கஜகர்ணபதம் -நல்ல செயலின் தடைவிலக, பித்ரு பூஜை செய்வோர் தகப்பனாருக்கு மகாளய தர்ப்பணம் செய்யும் போது இந்த முறைகளை விருப்பப்படி பயன்படுத்தலாம். தகுந்தவர்களிடம் கேட்டு செய்வது அவசியம்!