Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ... சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் பக்தர்களை பகவானிடம் சேர்ப்பது சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
12:09

திருப்பூர்: பகவானின் அருளுரைகளை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கத்தான், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன, என, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி பேசினார். திருப்பூர் காயத்ரி மஹாலில், நான் பிறந்த கதை என்ற தலைப்பிலான, ஐந்து நாட்கள் நடக்கும், ஆன்மிக சொற்பொழிவு நேற்று செப்.,19ல் துவங்கியது.

இதில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி பேசியதாவது: பகவானின் நண்பர்கள் மட்டும் பாக்யவான்கள் அல்ல. அவரை எதிர்த்தவர்களும், பகவானின் அருளுக்கு பாத்திரமாகினர். அதாவது, சதா பகவானின் நாமத்தையே நினைத்தனர்; இறுதியாக, பகவான் கையால் மடிந்து, நற்கதியை பெற்றுள்ளனர்.

எனவே, பக்தர்களாக நாம், பகவானின் வரலாற்றுடன், அவர்களது நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். வாசுதேவனின் வரலாறுகளை கேட்பவர்களுக்கு, பாவம் விலகும்; வாழ்வு சுபிட்ஷமாகும். ஒவ்வொரு அவதாரத்தின் போதும், கிருஷ்ணன் மக்களுக்கு நல்ல பாதையை காட்டிச்சென்றுள்ளார். நாம் அவற்றை கண்டறிந்து, நமது வாழ்விலும் பின்பற்றி வாழ
வேண்டும். ஆன்மிக சொற்பொழிவுகள் நடப்பதே, பகவானின் தகவல்களை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கத்தான். தற்போதைய காலகட்டத்தில், செல்வம் தேடுவதிலும், சேவையாற்று வதிலும் கூட, பக்தியை மறந்துவிடுகின்றனர். பொதுசேவை என்ற பெயரில், இறை வழிபாட்டை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொருவர் குடும்பத்திலும், பக்தி செலுத்தும் மார்க்கத்தில் இருந்து விடுபடக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு, மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar