பதிவு செய்த நாள்
01
அக்
2018
12:10
புரசைவாக்கம், கங்காதரேஸ்வரர் கோவிலில், சபரிமலைக்கு, நாங்கள் செல்ல மாட்டோம் என, பெண்கள் சத்தியம் செய்தனர்.சபரிமலை, அய்யப்பன் கோவிலுக்கு, பெண்கள், வயது பாகுபாடின்றி செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, புரசைவாக்கம் மற்றும் சூளை பகுதியைச் சேர்ந்த பெண்கள், கங்காதரேஸ்வரர் கோவிலில் ஒன்று கூடினர்.அவர்கள், தங்கள்கைகளில் விளக்கேற்றி, சபரிமலைக்கு, நாங்களும், எங்கள் வீட்டு பெண்களும் செல்ல மாட்டோம் என, சத்தியம் செய்தனர்.