‘கள்ள வாரணப் பிள்ளையார்’ என்று வழங்கப் பெறும் விநாயகர், திருக்கடையூர் திருத்தலத்து கோயிலில் ஓரமாக அமைதியாக இருட்டில் ஒதுங்கி அமைந்துள்ளார். பாற்கடலில் இருந்து பெறப்பட்ட அமுதக்கலசத்தை மறைத்து வைத்து கள்ளத்தனம் செய்தவராதலால் கோயிலில் விநாயகருக்குரிய சன்னதியில் இல்லாமல் மறைவாக இருந்து அருள்புரிகிறார்.