● நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் பிறக்கும். ● நல்ல குணம் கொண்டவர்கள் சுற்றத்தினருக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் பாக்கியத்தை தருகின்றனர். ● இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் வெளியே இருக்கும் துன்பம் உள்ளே இருக்கும் இதயத்தை வலிமையாக்குகிறது. ● எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான் முட்டாள். புத்திசாலி விலகியே இருப்பான். ● முதல்வனாய் இருக்க விரும்புபவன், எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும். ● நீதிமான் தன் மரணத்திலும், நம்பிக்கையை விட மாட்டான். ● மவுனமாயிருந்தால், முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள். ● புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபவரே அந்தக் குழிக்குள் விழுவார். ● நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது. ● வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் இல்லை.