பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு கார்த்திகை மாதம் இரண்டாவது பிரதோஷ பூஜை நேற்று முன் தினம் (டிசம்., 4ல்) நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது.
அதன் பின், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரிஷப வாகனத்தில் காசி விஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து அருள் பாலித்தார். வால்பாறையிலுள்ள கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.