சபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 11:12
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் பொருத்துவதற்காக தேக்கு மர கதவு நேற்று கொண்டு வரப்பட்டது.சபரிமலையில் சமீபத்தில் நடந்த தேவபிரசன்னத்தின் போது, சன்னிதானம் பழுதடைந்துள்ளதால் புதிய கதவு அமைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கதவு அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது.
கோயில் கட்டுமான பணி நிபுணரான குருவாயூர் இளவள்ளி நந்தன், தேக்குமர கதவு தயாரித்துள்ளார். இந்த கதவு இளவள்ளி சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.இது சபரிமலைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலச பூஜை நடத்தினார். பின், அளவு சரிபார்க்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.கதவு பொருந்தும் பட்சத்தில் கூடுதலாக சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்படும். ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு தங்கத் தகடுகள் பொருத்தப்படும். பின், இளவள்ளி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சபரிமலையில் பொருத்தப்படும்.