குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். ஆகவே குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். நடுவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை குறிப்பதாகும். எனவே திருமணப்புடவை அரக்கு நிறத்தில் மிகவும் இருப்பது நல்லது. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம்தான் ஸ்ரீமகாலட்சுமிய ின் இருப்பிடம். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர் பெறுபவர் இருவரும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருவர். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும், ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது சிறந்தது.