Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குங்குமத்தின் மகிமை நோய் தீர்க்கும் மாமருந்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இசையரசியின் தர்பார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
04:02

இசைவிமர்சகர் ஒருவர் தன் நுட்பமான விமர்சனங்களால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார். அவர் எழுதிய இசைவிமர்சனப் புத்தகத்தின் முதல்பிரதியை காஞ்சி மகாசுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற வந்தார். அவரிடம் பேசிய சுவாமிகள், தன்னை சந்திக்க பக்தர்கள் காத்திருப்பதால், ”நீ உடனே காமாட்சியம்மனை தரிசித்து  வா. பிறகு சாவகாசமாக பேசலாம். அங்கே தர்பார் நடக்கிறது.


முடிவதற்குள் போ” என்றார். அப்போது நவராத்திரி விழா என்பதால் காமாட்சியம்மன் கோயிலில் விமரிசையாக விழா நடந்து கொண்டிருந்தது. காமாட்சியம்மனுக்கு செய்யும் விசேஷ அலங்காரத்தில் தர்பாரும் ஒன்று. மகாராணியாக கிரீடம் சூடியபடி ராஜசபையில் கொலுவிருப்பது போல் செய்யப்படும் அலங்காரம் இது. இசைவிமர்சகர் வேகமாக கோயிலுக்கு சென்றார். அங்கு வழக்கமான அலங்காரத்தில் அம்மனை தரிசித்தார். ’அம்மன் தர்பாரில் இல்லையே? பின்னர் ஏன் தர்பார் முடிவதற்குள் போகச் சொன்னார் சுவாமிகள்?” என யோசித்தார் விமர்சகர் அப்போது மகாசுவாமிகளின் பக்தையான இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் காற்றில் தவழ்ந்து காதில் தேனாக தித்தித்தது. அன்று நவராத்திரி விழாவில் எம்.எஸ். ஸின் கச்சேரி. அவர் பாடியது  தியாகராஜ சுவாமிகள் எழுதிய சூயோசனா கமல லோசனாசூ என்ற தர்பார் ராகத்தில் அமைந்த பாடல்.  ”ஆஹா...! அலங்காரம் என்று நினைத்தோமே! தர்பார் ராகத்தை அல்லவா சுவாமிகள் சொல்லியிருக்கிறார்! பாடல் முடிவதற்குள், தான் அதைக் கேட்க வேண்டும் என்பதையே ’தர்பார் முடிவதற்குள் போ’ என்று  துரிதப்படுத்தினார் போலும்! சுவாமிகள் சொன்னதன் அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது! என மகிழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar