பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
வால்பாறை:வரட்டுப்பாறை எஸ்டேட் சக்தி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 17ல்) நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது வரட்டுப்பாறை எஸ்டேட். இங்குள்ள சக்தி முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் (பிப்., 16ல்) மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, மஹாசங்கல்பம் பூஜையுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு யாகசால பூஜை நடந்தது. நேற்று (பிப்., 17ல்) காலை, 6:00 மணிக்கு மாரியம்மன் மூலமந்தர ஹோமம், விஷ்வமங்கள ஹோமம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம், கோவிலை வலம் வந்த, விமான கலசங்களுக்கு ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடந்தது.அம்மனுக்கு பல்வேறு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சுப்ரமணி, பெருமாள், செல்வராஜ், பழனிசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.