பிதுர் எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அவர்களால் முற்காலங்களில் ஏற்பட்ட சாபம் ஆகியவை நீங்க நரசிம்ம பூஜை உகந்தது.
தெய்வங்களை நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பங்களைக் கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்று நம் முன்னோர் செய்த பாவங்களால், அவரது வம்சாவழியினர் துன்பங்களை அனுபவிப்பவதும் உண்டு. இவர்களுக்கு எளிய சாபநிவர்த்தி முறை இருக்கிறது. லட்சுமி நரசிம்மர் படம் முன்பு, பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கரும், ஸ்ரீரங்கம் கோபுரத்தை நிர்மாணித்தவருமான முக்கூர் ஸ்வாமிகள் அருளியுள்ளார்.