திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆகம விதிகள் மீறல்களும்முறைகேடுகளும் நடப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
சிபி சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்உள்ள இந்த கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆன்மிக நல ஆர்வலர்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் டி.ஆர்.ரமஷே் கூறியதாவது:கோவில்களில் புனரமைப்பு என்ற பெயரில் அதன் தொன்மையை அழகை அறநிலையத்துறையினர் சீர்குலைத்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனால்ஆறு பேர் அடங்கிய ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அனுமதியின்றி புனரமைப்பு பணி செய்யக் கூடாது. ஆனால் அனுமதி இன்றி சீரமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிப்பது வழக்கத்தில் உள்ளது.
புனரமைப்பு என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் அந்த பாதை அடைக்கப்பட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வடக்கு கோபுர வாசல் சீரமைப்பு பணி முடிந்தும்பாதை திறக்கப்படவில்லை. தற்போது அந்த வாசல் கோவில் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் திறக்கப்படுகிறது.கோவில் உபயதாரர்கள் ஐ.ஐ.டி. இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதில் கோவில் புனரமைப்பின் போது கிடைக்கும் அரிய பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவை அவர்களுக்கு சொந்தம் என்பது உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.இக்கோவிலுக்கும் அறநிலையத் துறைக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். கோவிலின் தொன்மையை காப்பாற்ற நீதிமன்றத்தின் உதவி நாடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.