பதிவு செய்த நாள்
18
செப்
2019
01:09
விழுப்புரம்: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், இன்று முதல் புரட்டாசி மாதம் முழுவதும், மூலவர் பெருமாள், நெய்தீப தரிசனத்தில், திருப்பதி திருமலையப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், இன்று 18ம் தேதி புரட்டாசி மாதம் 1ம் தேதி முதல், மாதம் முழுவதும், மூலவர் பெருமாள் திருப்பதி திருமலையப்பன் அலங்காரத்தில், நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தினசரி காலை 6:15 மணிக்கு கோபூஜை, விஸ்வரூபம், சுப்ரபாதம், 7;00 மணிக்கு தோமலை சேவை, காலை 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, 6:00 மணிக்கு சாயங்கால தோமாலை அஷ்டோத்ர அர்ச்சனை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. புரட்டாசி மாதம் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு, 108 கலச திருமஞ்சனம், திங்கட்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு அஷ்டதல சகஸ்ரநாம அர்ச்சனை, வியாழக்கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு நேத்ர தரிசனம் நடக்கிறது.