Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திரு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திரு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திரு மெய்ஞானபுரீஸ்வரர்
  அம்மன்/தாயார்: பாகம்பிரியாள்
  ஊர்: டி. வைரவன்பட்டி
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதானம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திரு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், டி. வைரவன்பட்டி, சிவகங்கை.  
   
    
 பொது தகவல்:
     
  இங்குள்ள மூலவர் திருமெய்ஞ்ஞான சுவாமி லிங்கத்திருமேனி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சாளாகாரம், பெரிய பிரகாரம் நந்தி மண்டபம், உள்பிரகாரம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் கருவறை கற்றளி அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். சிறந்த சிவன்கோயிலாகவும், வழிபடுவோர்க்கு சகல பேறுகளையும் வழங்கி வருகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக சகல பேறுகளையும் வழங்கி வரும் கோயில் என்பதால் மக்கள் பிரார்த்திக்கின்றன.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவன், அம்மன், பைரவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது. 
    
  தல வரலாறு:
     
  காபாலிக சைவம் நிலை கொண்ட காலம். இப்பகுதி அஷ்டபைரவர்களால் சன்னிதிகளை கொண்டு பிரசித்தி பெற்று விளங்கியது. வைரவன்பட்டி, வளரொளிநாதர் திருக்கோயில் யோக பைரவர், வைரவன்பட்டி வளரொளிநாதர் திருக்கோயில் பைரவர் சன்னிதி, ஒழுக மங்கலம் பைரவர், பெரிச்சிக்கோயில் ஆண்டப்பிள்ளை நாயனார் திருக்கோயில் பைரவர். பெரிச்சிக்கோயில் ஆண்டப்பிள்ளை நாயனார் திருக்கோயில் பைரவர். அழகாபுரி அருள்மிகு அழகு முனீஸ்வரர் திருக்கோயில் பைரவர் ஆகியன. முதலாம் இராஜராஜ சோழன் கி.பி.985-1014ல் அரசு புரிந்த மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற நூலை போதிக்கும் அந்தணர்களுக்கு அறக்கொடை நல்கியது. மாறவர்மன் குலசேகர பாண்டியன், சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் புஜபலதேவன், அச்சுத தேவராயன், மதுரை விசுவநாத நாயக்கர், தஞ்சை ரகுநாத நாயக்கர் ஆகியோர் கால கல்வெட்டுகளும் தானசாசனங்களும் இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதானம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar