பதிவு செய்த நாள்
02
டிச
2019
04:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 11:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், சங்கு மற்றும் கலசஸ்தாபனம், பஞ்சாண பூஜை, பஞ்சாவரண பூஜை, பூர்ணாகுதி கடம் புறப்பாடாகி மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.