Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் சுவாமி ... திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றம்: டிச.10ல் மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு 5 டன் மலர்களால் புஷ்பயாகம்
எழுத்தின் அளவு:
திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு 5 டன் மலர்களால் புஷ்பயாகம்

பதிவு செய்த நாள்

03 டிச
2019
10:12

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது.திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம், 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

அதில், ஏற்பட்ட நிறை குறைகளை சரி செய்ய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மதியம் தாயாருக்கு புஷ்பயாகம் நடந்து.அதை முன்னிட்டு, தாயாருக்கு காலை வசந்த மண்டபத்தில் பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், தாயாரை அலங்கரித்து தீப, துாப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.அதற்கு பின் ரோஜா, அரளி,சாமந்தி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள், துளசி, மருவம், வில்வம் உள்ளிட்ட இலைகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது. இதற்காக, 3 டன் எடையுள்ள பலவகையான மலர்கள் மற்றும் பத்திரங்கள் பல மாநிலங்களிலிருந்து தேவஸ்தானம் தருவித்து. இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar