பதிவு செய்த நாள்
14
டிச
2019
02:12
ஆனைமலை:ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குசுவாமி கோவிலில், 100வது குருபூஜை விழா சிறப்பாக நடந்தது.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குசுவாமி கோவிலில், 100வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (டிசம்., 12ல்) காலை, 6:00 மணிக்கு, கொடி கம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது.
கஞ்சி வழங்குதல், ஜோதி வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை, 5:10 மணிக்கு திரு மேனி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு அழுக்குசுவாமி களின், 100வது ஜீவ முக்தி திருநாளை முன்னிட்டு மறு பூஜை நடந்தது. தொடர்ந்து,
திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் தாமோதரன் குழுவினரின், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று திருவாசகம் முற்றோதி, சுவாமியை தரிசித்து சென்றனர்.