Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் ... கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் பூஜை கொண்டத்துக் காளியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நாள்

21 மார்
2026
10:03

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.


ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். 2013 முதல் பக்தர்கள் வசதிக்காக கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் ரதவீதியில் சிரமம் இன்றி நடந்து சென்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கோயில் நான்கு ரதவீதி, சன்னிதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலை இருபுறமும் 150க்கு மேலான கடைகளால் ஆக்கிரமித்து இருந்ததால், பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தியாக வந்தது. இதனையடுத்து பிப்., 5ல் அனைத்து ஆக்கிரப்பு கடைகளும் அகற்றப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்நிலையில் சில நாட்களாக சன்னதி தெரு சாலையில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனை அகற்றாவிடில், பக்தர்கள் செல்ல முடியாதபடி மேலும் பலகடைகள் அமைத்து ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால் பக்தர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாக உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி மாதம் முதல் சனி கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar