ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2026 10:03
போத்தனூர்: இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், ஜாக் அமைப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டது.குனியமுத்தூர் அருகே திருமண மண்டபத்தில் காலை நடந்த சிறப்பு தொழுகையில், பெருநாள் குறித்து உமர் ஷெரீப் காஸிமி செய்தி கொடுத்தார். ஜாக் அமைப்பின் மஸ்ஜிதுல் முஸ்லிமீன் உள்பட, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.