பெண்ணாடம் : கருங்குழிதோப்பு பரிமள ரங்கநாதர் கோவிலில், சிவ தொண்டர் குழுவினர் உழவாரப் பணி மேற்கொண்டனர்.
பெண்ணாடம், கருங்குழிதோப்பு, பரிமள ரங்கநாதர் கோவில் வளாகத்தில் செடி, கொடிகள் மண்டி யிருந்தன. அவைகளை சிவ தொண்டர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று 15ம் தேதி காலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவில் கோபுரம், நந்தவனம், உள் மற்றும் வெளி பிரகாரங்களில் மண்டியிருந்த செடி, கொடிகள், முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர்.